இத்தலம் காவிரிதென்கரையில் இருப்தாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை
மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத்
தழுவுகின்றது.ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. நந்தி பலிபீடம் உள்ளது. முன்மண்டபத்தில் தலப்பதிகக்கல்வெட்டுள்ளது.
கல்வெட்டுக்கள்: இக்கோயிலில் 15 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு பாண்டியருடையன; மற்றவை சோழர் களுடையவை.
பாண்டியர்களில் மாறன் சடையனின் 6ஆம் 8ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் அழிந்திருக்கின்றன.
இம்மாறன் சடையன் 8ஆம் நூற்றாண்டில் (கி.பி.770ல்) ஆனைமலைக் கல் வெட்டைச் செதுக்கிய சடாவர்மனாக இருக்கலாம் என்பது வேள்விக்குடி சாசனத்தால்
அறியக்கிடக்கின்றது.சோழர் கல்வெட்டுக்களில் உத்தம சோழன் (கி.பி.970-86) முதலாம் இராசராசன் (கி.பி.985-1013) முதற்குலோத்துங்கன், வீரராசேந்திரன்,
இரண்டாம் இராசராசன் ஆகியோரது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அக் கல்வெட்டுக்களின் வாயிலாகச் சில செய்திகள் அறியக்கிடக்கின்றன. இவ்வூர் முதலாம்
இராசராசன் காலத்தில் தென்கரைத் திரைமூர் நாட்டுத் திருத்தென் குரங்காடுதுறை எனவும்; திரிபுனச் சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்தில் பூ பால
குலவல்லி வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை எனவும் வழங்கப்பட்டதாக அறிகிறோம்.
இத்தலம் காவிரிதென்கரையில் இருப்தாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது. ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. நந்தி பலிபீடம் உள்ளது.
முன்மண்டபத்தில் தலப்பதிகக்கல்வெட்டுள்ளது. இக்கோயிலில் 15 கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு பாண்டியருடையன, மற்றவை சோழர்களுடையவை. பாண்டியர்களில் மாறன் சடையனின் 6ஆம் 8ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் அழிந்திருக்கின்றன. இம்மாறன் சடையன் 8ஆம் நூற்றாண்டில் ஆனைமலைக் கல்வெட்டைச் செதுக்கிய சடாவர்மனாக இருக்கலாம் என்பது வேள்விக்குடி சாசனத்தால் அறியக்கிடக்கின்றது.
சோழர் கல்வெட்டுக்களில் உத்தம சோழன், முதலாம் இராசராசன், முதற்குலோத்துங்கன், வீரராசேந்திரன், இரண்டாம் இராசராசன் ஆகியோரது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அக் கல்வெட்டுக்களின் வாயிலாகச் சில செய்திகள் அறியக்கிடக்கின்றன. இவ்வூர் திரிபுனச் சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்தில் பூ பால குலவல்லி வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை எனவ வழங்கப்பட்டதாக அறிகிறோம். |