இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கிழக்கு நோக்கிய கோயில். வலப்பால் கோயில் அலுவலகமுள்ளது. ராஜகோபுரமில்ùல.
கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது.வாயிலைத்தாண்டி உட்சென்று வலமாக
வரும்போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர் (உற்சவர்) சந்நிதி, தியாகராஜசபை, விநாயகர் பல சிவலிங்கத் திருமேனிகள், மாகவிஷ்ணு, ஆறுமுகசுõவமி,
சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன. பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருள்பாலிக்கும் விநாயகர் கடுக்காய் விநாயகர்
எனப்படுகிறார். ஒரு முறை வணிகன் ஒருவன் வண்டி நிறைய ஜாதிக்காய்களை ஏற்றிக்கொண்டு வந்து இரவில் இத்தலத்தில் தங்கினான். அப்போது
விநாயகர் சிறுவன் வடிவில் வந்து மூட்டைக்குள் இருப்பது என்னவென்று கேட்க, மூட்டைக்குள் இருப்பது ஜாதிக்ககாய் என்று சொன்னால் நிறைய
வரிகட்ட வேண்டி வரும் என பயந்து, இவையனைத்தும் "கடுக்காய்' என பொய் கூறினான். அதன்படியே ஜாதிக்காய் அனைத்தும் கடுக்காய்களாக மாறின.
சிறுவனாக வந்திருப்பது விநாயகர் என்பதை அறிந்த வணிகன் விநாயகரிடம் மன்னிப்பு கேட்க அவை மீண்டும் ஜாதிக்காய்களாக மாறின. அன்றிலிருந்து
இவர் "கடுக்காய் விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கோயில். வலப்பால் கோயில் அலுவலகமுள்ளது. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலைத்தாண்டி உட்சென்று வலமாக வரும்போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர் சந்நிதி, தியாகராஜசபை, விநாயகர் பல சிவலிங்கத் திருமேனிகள், மாகவிஷ்ணு, ஆறுமுகசுõவமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன.
பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருள்பாலிக்கும் விநாயகர் கடுக்காய் விநாயகர் எனப்படுகிறார். ஒரு முறை வணிகன் ஒருவன் வண்டி நிறைய ஜாதிக்காய்களை ஏற்றிக்கொண்டு வந்து இரவில் இத்தலத்தில் தங்கினான். அப்போது விநாயகர் சிறுவன் வடிவில் வந்து மூட்டைக்குள் இருப்பது என்னவென்று கேட்க, மூட்டைக்குள் இருப்பது ஜாதிக்ககாய் என்று சொன்னால் நிறைய வரிகட்ட வேண்டி வரும் என பயந்து, இவையனைத்தும் "கடுக்காய்' என பொய் கூறினான். அதன்படியே ஜாதிக்காய் அனைத்தும் கடுக்காய்களாக மாறின.
சிறுவனாக வந்திருப்பது விநாயகர் என்பதை அறிந்த வணிகன் விநாயகரிடம் மன்னிப்பு கேட்க அவை மீண்டும் ஜாதிக்காய்களாக மாறின. அன்றிலிருந்து இவர் "கடுக்காய் விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.
|