இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அரிவாள்தாய நாயனார் பிறந்த தலம்.முகப்புவாயில் உள் நுழையும் போது இடப்பால்
அதிகார நந்தி சந்நிதி உள்ளது. கொடி மரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரத்து விநாயகர் உள்ளார்.பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும்,
கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும், தொடர்ந்து
சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் பூசித்த சிவலிங்கங்கள், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகளும் உள்ளன.
பக்கத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் திருச்சிற்றேமம், திருவாய்மூர், திருக்குவளை, திருக்கள் முதலியன.குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை.பொதுவாக அனைத்து கோயில்களிலும் நடராஜரின் தலையில்
வீற்றிருக்கும் கங்கா தேவி இத்தலத்தில் நடராஜரின் பாதத்தில் அருள்பாலிக்கிறாள்.முன்னொரு காலத்தில் தண்டலச்சேரிக்கு கிழக்கே சுமார் 2 கி.மீ.
தூரத்தில் கண்ணமங்கலம் என்ற ஊர் இருந்தது. இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகிறது. சோழநாட்டிற்கு வளத்திற்கு
இலக்கணமாக இவ்வூர் அமைந்திருந்தது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அரிவாள்தாய நாயனார் பிறந்த தலம்.முகப்புவாயில் உள் நுழையும் போது இடப்பால் அதிகார நந்தி சந்நிதி உள்ளது. கொடி மரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரத்து விநாயகர் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும், தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் பூசித்த சிவலிங்கங்கள், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகளும் உள்ளன.
பக்கத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் திருச்சிற்றேமம், திருவாய்மூர், திருக்குவளை, திருக்கள் முதலியன. குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை. பொதுவாக அனைத்து கோயில்களிலும் நடராஜரின் தலையில் வீற்றிருக்கும் கங்கா தேவி இத்தலத்தில் நடராஜரின் பாதத்தில் அருள்பாலிக்கிறாள். |