இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும்.மாணிக்க வாசகர்,
சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார் கோச்செங்கட்சோழ மன்னனால் கட்டப்பட்ட 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.இத்தல விநாயகரை பிரும்ம
வரதர் என்றும் அழைக்கிறார்கள். அஷ்ட விநாயகர் தலங்களில் இதுவும் ஒன்று.மூன்று நிலை ராஜ கோபுரம், 5 பிரகாரங்கள் உள்ளன. சுவாமி
சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சுப்பிரமணியர் சன்னதி அமைந்திருப்பதால் இத்தலம் "சோமாஸ்கந்த மூர்த்தி' தலமாகும்.
பிரகாரத்தில் பாலகணபதி, பாலமுருகன், இந்திரலிங்கம், கவுதமலிங்கம், அகல்யா லிங்கம், மாணிக்கவாசகர் வழிபட்ட ஆத்மலிங்கம், நடராஜர் ஆகியோர்
அருள்பாலிக்கிறார்கள். வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன்
இல்லை. வியாழபகவானுக்கு குரு பட்டத்தை வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி "தேவகுரு' என அழைக்கப்படுகிறார்.பொதுவாக கோயில்களில்
சிவதுர்க்கை, அல்லது விஷ்ணு துர்க்கை இருப்பாள். ஆனால் இத்தலத்தில் உள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும், மறுகையில் மான், மழுவும் வைத்து
சிவ-விஷ்ணு துர்க்கையாக அருள்பாலிக்கிறாள்.
இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும். மாணிக்க வாசகர், சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார் கோச்செங்கட்சோழ மன்னனால் கட்டப்பட்ட 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. இத்தல விநாயகரை பிரும்ம வரதர் என்றும் அழைக்கிறார்கள். அஷ்ட விநாயகர் தலங்களில் இதுவும் ஒன்று.
மூன்று நிலை ராஜ கோபுரம், 5 பிரகாரங்கள் உள்ளன. சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சுப்பிரமணியர் சன்னதி அமைந்திருப்பதால் இத்தலம் "சோமாஸ்கந்த மூர்த்தி' தலமாகும். பிரகாரத்தில் பாலகணபதி, பாலமுருகன், இந்திரலிங்கம், கவுதமலிங்கம், அகல்யா லிங்கம், மாணிக்கவாசகர் வழிபட்ட ஆத்மலிங்கம், நடராஜர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
வியாழ பகவான் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை. வியாழபகவானுக்கு குரு பட்டத்தை வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி "தேவகுரு' என அழைக்கப்படுகிறார். பொதுவாக கோயில்களில் சிவதுர்க்கை, அல்லது விஷ்ணு துர்க்கை இருப்பாள். ஆனால் இத்தலத்தில் உள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும், மறுகையில் மான், மழுவும் வைத்து அருள்பாலிக்கிறாள். |