பெயர்: இளங்கோ பிறந்த ஊர்: யாழ்ப்பாணம், அம்பனை - இலங்கை வசிக்கும் ஊர்: டொரேண்டோ, கனடா www.djthamilan.blogspot.com
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கவிதைகள், சிறுகதைகள் எனத் தொடர்ந்து பயணிக்கும் இளங்கோ ஈழத்து இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர். போரின் நிமித்தமாக ஈழத்திலிருந்து தன் பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த இளங்கோ தற்போது டொரோண்டோவில் வசித்து வருகிறார். ‘டிசே தமிழன்’ எனும் புனைபெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள், பத்திகளையும் எழுதி வருகிறார்.
இதுவரை வெளிவந்துள்ள இவருடைய நூல்கள் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இங்கே.
- நாடற்றவனின் குறிப்புகள் வெளியீடு- அம்பனா கவிதை நூல் - 2008 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘ஏலாதி’ இலக்கிய விருது பெற்றது
-
- சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் வெளியீடு- கயல்கவின் பதிப்பகம் போரின் அவலங்களையும், புலம் பெயர் வாழ்வின் பண்பாட்டுச் சிக்கல்களையும் பேசும் 12 சிறுகதைகளின் தொகுப்பு
-
- பேயாய் உழலும் சிறுமனமே ,வெளியீடு-அகநாழிகை அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு போன்ற பல தலைப்புகளில் இளங்கோ
எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
-
- உதிரும் நினைவின் வர்ணங்கள்,வெளியீடு-அகநாழிகை , உலகத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு
-
- மெக்ஸிக்கோ (நாவல்) ,வெளியீடு-டிஸ்கவரி புக் பேலஸ் மனித வாழ்வு என்பது பல உறவுகளின் சங்கமம். அந்த வகையில், காதலில் தொடர்ந்து தோல்வியுற்று துவண்டிருக்கும் ஒருவன் மெக்ஸிகோவில் சந்திக்கும் அழகிய இளம்பெண் ஒருத்தியின் ஊடாக தன் வாழ்வைப் புதிதாக நுகரும் அனுபவமே ‘மெக்ஸிகோ’ நாவல். இந்தப் படைப்பு 2019 பிரபஞ்சன் நினைவு பரிசுப் பெற்றது
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
|