|
|||||
அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு. |
|||||
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின், உலக அளவிலான முதலாம் ஆண்டு இலக்கிய விருதுகளுக்குத் தேர்வு பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:
நாவல் - குளம்படி எழுத்தாளர் வெற்றிச்செல்வன் ராசேந்திரன்.
மரபுக்கவிதை- வேலுநாச்சியார் காவியம்- புதுகை வெற்றிவேலன்.
ஹைக்கூ- பொட்டலம்- கவிஞர் நயினார், கட்டுரை- தண்டனைக் களமாகும் 'பெண்ணுடல்- ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜ்.
தன்னம்பிக்கை நூல்- ஆட்சித்தலைவிகள்- எழுத்தாளர் ஜி.வி. ரமேஷ்குமார்.
சிறுகதை- கரியோடன்- எழுத்தாளர் சாரோன்.
புதுக்கவிதை- என் பெயரெழுதிய அ எழுத்தாளர் கண்மணி ராசா
எழுத்தாளர் கண்மணி ராசா சிறுவர் இலக்கியம்- பாப்பாவுக்கு பாவைப்பாட்டு- எழுத்தாளர் சாந்தி சந்திரசேகர்
கட்டுரை- மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்- எழுத்தாளர் ந. முருகேசபாண்டியன் சிறந்த சிற்றிதழ்- புன்னகை-க.
அம்சப்பிரியா, ச. ரமேஷ்குமார் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 30-ம் தேதி மாலை 6 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.
பாராட்டுச் சான்றிதழ், தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். விருது பெறுபவர்களின் பட்டியலை, சீனு சின்னப்பா மகன் அருண் சின்னப்பா வெளியிடக் கவிஞர் நா.முத்துநிலவன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, செயலர் கவிஞர் மகா சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
|||||
by Kumar on 25 Apr 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|