தத்தாத்ரேயருக்குரிய தனி கோயில். ஒருகாலத்தில் வனமாக இருந்த இங்கு தத்தாத்ரேயர் என்னும் மகரிஷி, சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, வேட்டைக்கு வந்த மன்னர் ஒருவர், இங்கிருந்த மானை வீழ்த்த குறிவைத்து, தவறுதலாக மகரிஷியின் மார்பில் அம்பை எய்து விட்டார்.மகரிஷி மரண
நிலைக்கு செல்லவே கலக்கமடைந்த மன்னர் அவரிடம், தெரியாது செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதற்கு மகரிஷி, ""நான் உன்னை
மன்னித்தாலும் ஒரு உயிரைக் கொன்ற பாவத்தை இறைவன் மன்னிக்கமாட்டான் என்றார்."பரிகாரம் யாது செய்தால் எனது பாவம் நீங்கும்?' என்று மன்னர் கேட்க,
""இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி, அவரை முழுமனதுடன் வழிபட்டால், பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும்,'' என்றார். அதன்படி இவ்விடத்தில் மன்னர்,
சிவனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கினார். மகரிஷியின் பெயரால், இங்குள்ள சிவன் "தத்தாத்ரேயர்' என்றே அழைக்கப்படுகிறார். இங்கு தியானம்
செய்தால் மனம் ஒருமை அடையும். இறைவனை வேண்டி தவம் செய்திட கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.
தத்தாத்ரேயருக்குரிய தனி கோயில். ஒருகாலத்தில் வனமாக இருந்த இங்கு தத்தாத்ரேயர் என்னும் மகரிஷி, சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வேட்டைக்கு வந்த மன்னர் ஒருவர், இங்கிருந்த மானை வீழ்த்த குறிவைத்து, தவறுதலாக மகரிஷியின் மார்பில் அம்பை எய்து விட்டார். மகரிஷி மரண நிலைக்கு செல்லவே கலக்கமடைந்த மன்னர் அவரிடம், தெரியாது செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதற்கு மகரிஷி,
""நான் உன்னை மன்னித்தாலும் ஒரு உயிரைக் கொன்ற பாவத்தை இறைவன் மன்னிக்கமாட்டான் என்றார். "பரிகாரம் யாது செய்தால் எனது பாவம் நீங்கும்?' என்று மன்னர் கேட்க, ""இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி, அவரை முழுமனதுடன் வழிபட்டால், பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும்,'' என்றார். அதன்படி இவ்விடத்தில் மன்னர், சிவனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கினார்.
மகரிஷியின் பெயரால், இங்குள்ள சிவன் "தத்தாத்ரேயர்' என்றே அழைக்கப்படுகிறார். இங்கு தியானம் செய்தால் மனம் ஒருமை அடையும். இறைவனை வேண்டி தவம் செய்திட கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. |