LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

முதல் மேடைப்பேச்சு

தமிழ் நாட்டில் டாக்டர் வரதராஜூலு நாயுடு திரு . வி . க ., டாக்டர் டி . எஸ் . எஸ் . ராஜன் ஆகியோரின் பேச்சு முறை மக்களைக் கவர்ந்தது . திரு . வி . க . வின் இனிய தமிழ் பலரது உள்ளங்களை ஈர்த்தது . அனைவரும் விடுதலை உணர்வு பொங்கப் பேசினார்கள் .

ஈ . வே . ரா - வின் பேச்சு கர்ஜனையாக எதிரொலித்தது , சிக்கலான , நுணுக்கமான அரசியல் விஷயங்களை எல்லாம்அவர் பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய முறையில் விளக்கிப்பேசிய அந்தத் திறமை எல்லாருக்கும் பிடித்தது . இதை காமராசரும் மிகவும் ரசித்தார் . எல்லாத் தலைவர்களின் பேச்சும் பத்திரிக்கைகளில் வெளிவரும் . அதனைக் காமராசர் படிக்கத்தவறுவதில்லை . இதனால் காமராசரின் அரசியல் அறிவு விரிந்தது . விவாதத் திறமை வளர்ந்தது . குறைந்த வார்த்தைகளில் தெளிவு நிறைந்த எதிரிகளை வசீகரிக்கக் கூடிய பேச்சாகப் பேசுவார் . வெள்ளைக்காரன்மேல் அபிமானம் கொண்டவர்களையும் காமராசரின் பேச்சு மாற்றியது .

காங்கிரஸ் கூட்டத்தில் வெளியூர் ஆட்கள் மட்டுமின்றி உள்ளூர் ஆட்களும் பேசலாம் என்ற எண்ணம் எழுந்ததால் உள்ளூர்ப் பேச்சாளர்களைப் பேச வைத்தார்கள் . இந்நிலையில் அடித்துப்பேசும் ஆற்றல் கொண்ட காமராசரும் மேடையில் பேச வேண்டும் என்று காங்கிரசார் விரும்பினார்கள் . தோழர் தங்கப்பன் வற்புறுத்தி காமராசரை சம்மதிக்கச் செய்தனர் .

விருதுநகருக்கு மேற்கே பாவாடி ஜமீன் பக்கம் உள்ள எளியநாயக்கன்பட்டியில் குமாரசாமித் தேவர் என்பவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் . காமராசர் முதன் முதலாக அந்த மேடையில் பேச்சைத் தொடங்கினார் . காமராசர் சாதாரணமாகப் பேச்சுத்தமிழில் பேசினார் .

“கூட்டத்தை நடத்தித் தர முன்வந்த பெரிய தனக்காரருக்கு நமஸ்காரம். உங்கள் முன்னாலே பேச சந்தர்ப்பம் கிடைச்சதுக்கு ரொம்ப சந்தோஷம்.

இப்போ நம் வீட்டுக்குள்ளே பக்கத்து வீட்டுக்காரன் வந்து அதிகாரம் செஞ்சா நீங்க விடுவீங்களா ? இப்படித்தான் ஆறாயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிற ஊரிலே உள்ள வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வந்து இருக்கான் .

நம்ம நிலத்திலே பயிர் செஞ்சு சாப்பிடுறோம் . அதே மாதிரி நம்ம ஊர்ப் பருத்தியை நாமே நூற்று வேட்டி கட்டினா இவனுக்கு என்ன ? ” என்று கேள்விக் குறி போட்டுப் பேசினார் . விவசாயிகள் சிரித்துச் சிரித்து ரசித்து கேட்டார்கள் . இவ்வாறாக காமராசரின் முதல்மேடைப்பேச்சு வெற்றிகரமாக அமைந்தது . தோழர்களிடத்திலும் காங்கிரஸ் வட்டாரத்திலும் பெரும் பாராட்டு கிடைத்தது .

பிறகு நகரங்களில் காமராசர் மாபெரும் கூட்டத்திலும் , அருமையாகப்பேசினார் . தமிழ் நடை மாறினாலும் , கூட்டத்தினரோடு உரையாடும் முறையை மாற்றாமல் பேசிவந்தார் .

by Swathi   on 20 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.