LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

கல்வித்துறை வளர்ச்சி

 தாம் பொதுத்தொண்டில் கலந்து கொண்ட காலம் முதல் கல்வியில் ஆர்வம் கொண்ட கக்கன் . தாம் வேளாண் அமைச்சராக இருக்கும் போதும் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் கல்வித்தரத்தைக் கேட்டறிவார் . இது அவருக்கு மனமுவந்த பணியாக இருந்தது . தமக்கு நேரடியாகத் தொடர்பில்லாத துறையாக இருந்தாலும் பள்ளிகளுக்குச் செல்ல தயங்குவதில்லை . 1957 இல் விவசாய அமைச்சராகி மதுரைக்குச் சென்று இவரால் அழைக்கப்பட்ட முதல் அதிகாரி , மாவட்டக் கல்வி அதிகாரி என்பதை முன்பே பார்த்தோம் .

இவருக்கு அளிக்கப்பட்ட மற்றொரு துறையான தாழ்த்தப்பட்டோர் நலத்துறை , இவருக்கு இருந்த கல்வி ஆர்வத்தை மிகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருந்தது . மாவட்டந்தோறும் பள்ளிகள் இருக்கும் ஊர்களில் விடுதிகள் தொடங்கி ஏழை மக்களுக்குப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார் . இந்த விடுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பிறசாதியினருக்கும் குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்கித்தந்து ஏழைகளுக்கு உதவினார் . 1963 க்குள் தாழ்த்தப்பட்ட நலத்துறையின் கீழ் இயங்கும் 1052 பள்ளிகளைத் திறந்த பெருமை கக்கனுக்கு உண்டு . அப்பள்ளிகளில் , காமராசரால் மிகவும் மனமுவந்து தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார் .

வீட்டுவசதி

தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி வீட்டுவசதி வாரியம் ஒன்றினை அமைத்து , குடிசைவாழ் மக்களுக்கும் கிராமவாழ் மக்களுக்கும் உதவுமாறு நடைமுறைப்படுத்தினார் . அதில் பத்து விழுக்காடு பிற சாதி இந்துக்களுக்கு ஒதுக்கி அவர்கள் விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆணை வழங்கினார் . ஆனால் எந்தப் பிற சாதியாரும் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.