LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

மனித நேயம்

ஒரு பெரியவர் மிகவும் கஞ்சர் . அவருக்கு உடல் நலமில்லை என்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அவரைப் பார்க்க வந்த ஒருவர் இரண்டு ஆப்பிள் பழங்களுடன் வந்தார் .

அந்தப் பெரியவர் ஆப்பிளின் விலை , யாரிடம் வாங்கினீர்கள் ? என்பது போன்ற விபரங்களைக்கேட்டு அறிந்தார் .

வந்தவர் “ இந்த விபரங்களை ஏன் இவ்வளவு விரிவாகக் கேட்கிறீர்கள் ” என்று கேட்டார் . அதற்கு அவர் “ எனக்கு பழங்களை விட பணம்தான் தேவை ; எனவே என்னைப் பார்க்க வருபவர்கள் வாங்கி வரும் பழங்களை விற்று காசாக்க மருத்துவமனை வாசலிலேயே ஆள் வைத்திருக்கிறேன் . அவன் நாணயமானவனாக நடந்து கொள்கிறானா ? என்பதற்காகத்தான் உங்களிடம் விசாரித்தேன் ” என்றார் .

உடல் நலமில்லாத நிலையில் வாங்கி வரக்கூடிய பழங்களைக் கூட பணமாக்கும் சமுதாயத்தில் தன்னோடு வரும் உதவியாளர்களும் உரிய நேரத்தில் பசியாற வேண்டும் என்று நினைப்பவர் பெருந்தலைவர் .

1960- இல் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்கு பெருந்தலைவர் வந்தார் . அங்கு நடந்த வேறு சில விழாக்களிலும் கலந்து கொண்டு இரவு உணவுக்காய் யாதவாள் சத்திரத்தை அடைந்தார் . காஞ்சிபுரம் இட்லி தலைவருக்கு விருப்பம் என்பதால் அதனைக்கொடுத்தனர் .

சாப்பிட்ட பிறகு இரவே காரில் சென்னை திரும்புவதாக ஏற்பாடு . எனவே உடன் வந்தவர்களை விரைவு படுத்தினார்கள் . அதனைக் கண்ட பெருந்தலைவர் தடுத்தார் .

“வேண்டாம், அவர்களை அவசரப் படுத்தினால், அரைகுறையாகச் சாப்பிட்டு விட்டு எழுந்து விடுவார்கள். டிரைவர் விழித்துக்கொண்டு கார் ஓட்ட வேண்டாமா? அவர்களெல்லாம் மெதுவாகச் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வெடுத்த பிறகே கிளம்பலாம். ஒன்றும் அவசரமில்லை”என்றார்.

மற்றவர்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற இந்த மனித நேயம் எல்லாருக்கும் இருந்தால் நல்லது .

by Swathi   on 21 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.