LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

மார்டின் லூதர் கிங் ஜூனியர்

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை .

முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய

அவசியமில்லை முதல் படியில் ஏறு .


அமெரிக்காவில் கருப்பான மக்களின் சமூக உரிமைக்காகப் போராடிய மாபெரும் ஆப்பிரிக்க - அமெரிக்க தலைவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் ( Martin Luther King ,Jr. ) ஆவார் . இவர் அமெரிக்காவில் 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று பிறந்தார் . இவருடைய பெயர் மைக்கேல் கிங் ஆகும் . அப்போது ஜெர்மனியில் புகழ்பெற்றிருந்த சீர்திருத்தவாதி மார்டின் லூதர் என்பவருடைய பெயரை இவருடையதாக மாற்றிக் கொண்டார் . இவர் பாதிரியாராகப் பணிபுரிந்தார் . அமெரிக்காவில் வெள்ளையர்களின் நிறவெறியால் கருப்பு மனிதர்களை அடிமைப்படுத்திவந்தனர் . காந்தியின் அறப் போராட்ட வழியில் பல போராட்டங்களை நடத்தினார் . இதனால் இவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தனர் .

இவர் 1962 ஆம் ஆண்டில் வேலையும் , சுதந்திரமும் வேண்டி மிகப் பெரிய பேரணியை நடத்தினார் . இவரின் போராட்டங்களின் பலனாக கருப்பான மக்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது . கருப்பினத்தவர்களும் , வெள்ளையினத்தவர்களும் சமம் என்னும் மனித உரிமைச் சட்டம் அமெரிக்காவில் நிறைவேறியது . வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கு எதிராக பாடுபட்டதற்காக 1964 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது .1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி என்னும் இடத்தில் சொற்பொழிவு ஆற்றச் சென்றார் . அவர் விடுதியில் தங்கியிருக்கும் போது வெள்ளையினத் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.