LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 7 : வாங்குவது தீது; கொடுப்பது நன்று

- முனைவர் கி.செம்பியன்


நல்லா றெனினுங் கொளறீது மேலுலக

மில்லெனினு மீதலே நன்று     (222)

(கொளல் நல்லாறு எனினும் தீது----ஏற்றல் வீட்டுலகிற்கு நல்லநெறியென்பார; உளராயினும் அத தீது; மேலுலகம் இல் எனினும் ஈதலே நன்று---ஈந்தார;க்கு அவ்வுலகெய்துதலில்லையென்பார; உளராயினும் ஈதலே நன்று---பரிமேலழகர;)

வாங்குவது கேவலம்!


எந்த நாட்டில்?


வள்ளுவன் குறள் பாடிய நாட்டில்!


என்ன வாங்குவது?


கையில் பணம், அரிசி, பூசணிக்காய், பறங்கிக்காய், துணிகள் போன்ற விரும்பிக் கொடுப்பனவற்றை வாங்குவதே தீது என்றால், கிம்பளம் வாங்குவதை என்ன சொல்வது?


வாங்குவது நல்வழி என்று யார் கற்பித்தது?


இந்த வேற்று ஆசாரத்தை வெறுத்தார் வள்ளுவர்!
சுவர்க்கத்தில் இடம் கிடைக்காவிட்டாலும் ஈதலே நன்று!
ஈயெனக் கேட்பது இழிந்தது!
கேட்டுவிட்டால் கொடுக்காமல் இருப்பது இழிந்தது!
பெற்றுக்கொள்பவர் இருக்கும்வரை ஈதல் நன்று!


அற்றவர்க்கு ஒன்று ஈவதே ஈகை!


இலஞ்சம் கொடுப்பது ஈகையா?


கடமையைச் செய்வதற்கு இலஞ்சம் வாங்குவது தீதினும் தீது!
ஈன்றவள் பசித்தாலும், சான்றோர் பழிக்கும் காரியத்தைச் செய்யக்கூடாது என்பது வள்ளுவம்!


தாயைக் காப்பாற்றுவதாக இருந்தால்கூட இலஞ்சம் வாங்கிக் காப்பாற்றக்கூடாது என்பதே வள்ளுவம்!


உயர்ந்த தத்துவங்கள் பூத்துவிட்டன அறியாமை நிறைந்த நாட்டில்!
காட்டிலே பூத்த மணமுள்ள மலர்;! யாருக்கு இலாபம்!
வாங்குவதைக் கலாச்சாரமாகவே மாற்றிவிட்டார்கள்!
பன்றி போட்டால் குட்டி; மரம் செழித்தால் கன்று; மனிதன் பெற்றால் குழந்தை!
மாடு போட்டால் சாணி; யானை போட்டால் லத்தி; மனிதன் கழித்தால் ஈகார பகரம்!


தெருவில் வாங்கினால் பிச்சை!


அலுவலகத்தில் வாங்கினால் இலஞ்சம்!


அமைச்சர்கள் வாங்கினால் ஊழல்!


வாங்குவதற்கு நியாயம் கற்பித்துக்கொண்டார்கள்!


வாங்குவது உலகப் பிரச்சினையாம்; உலகம் முழுவதும் உள்ளதாம்! அழிக்கமுடியாதாம்!
அணுக்குண்டு சோதனையாம்; கணிப்பொறி வித்தைகளாம்; நிலவுக்குப் போவார்களாம்; விண்வெளிச் சோதனைகளாம்; பீரங்கிகளாம்; துப்பாக்கிகளாம்!
கொடியேற்றி வீரமுழக்கம் செய்வார்களாம்!


முப்படை அணிவகுப்பாம்; மூவேந்தர; பரம்பரையாம்; முத்தமிழ் வேந்தர்களாம்; ஆரிய மாயைகளாம்; திராவிட மாயைகளாம்; அத்தனைக்குப் பிறகும் அழிக்கமுடியாத இலஞ்சங்களாம்!


பிறப்புச் சான்றிதழுக்குத் தனி; இறந்தால் தனி; வாழ்ந்தால் தனி; மண்ணாய்ப்போனாலும் தனி!


வள்ளுவத்தைப் படித்துவிட்டு மறந்துவிடு! வள்ளுவத்தைப் படி; மனப்பாடம் செய்; மதிப்பெண் வாங்கு; மேடையில் முழங்கு; கட்டுரை எழுது; அத்துடன் நிறுத்து!
வள்ளுவத்தில்; வாங்காதே தூங்காதே என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறதா?


காமத்துப் பாலுக்குப் போ!


மாதரின் கொங்கைமேல் துகில்; அந்தத் துகில் யானையின் நெற்றியில் இடப்பட்ட முகபடாம்!


அதைப் படித்து மயங்கு; போதை கொள்!
நீ எப்போதும் போதையில் ஆழ்ந்திருக்கவேண்டும்!கொள்ளல் தீது; ஈதல் நன்று!
ஒன்றை மட்டும் மாற்றிக்கொள்வோம்!
இலஞ்சம் என்பதுதான் ஈதல்!
எனவே, 


இலஞ்சம் நன்று!


நாட்டுக்கு ஏற்பக் கடிகார மணியை மாற்றிக்கொள்ளவேண்டும்!
நடப்பிற்கு ஏற்பக் குறளை மாற்றிக்கொள்வோம்!

 

(தொடரும்....)

by Swathi   on 29 Feb 2016  0 Comments
Tags: Theethu   Vanguvathu   Thamizhar   தமிழர்   தீது   திருவள்ளுவர்   திருக்குறள்  
 தொடர்புடையவை-Related Articles
பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!! பூம்புகார் நிறுவனத்தின் வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் திட்டம்!!!
ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்! ஓங்கி உலகளந்த தமிழர் - 15 : செய்தாலும் கெடும்; செய்யாவிட்டாலும் கெடும்!
ஓங்கி உலகளந்த தமிழர் - 7 : வாங்குவது தீது; கொடுப்பது நன்று ஓங்கி உலகளந்த தமிழர் - 7 : வாங்குவது தீது; கொடுப்பது நன்று
ஓங்கி உலகளந்த தமிழர் - 6 : வாழ்க்கை வளத்திற்கேற்ப ஓங்கி உலகளந்த தமிழர் - 6 : வாழ்க்கை வளத்திற்கேற்ப
ஓங்கி உலகளந்த தமிழர் - 5 : உலகம் யார் கையில் ஓங்கி உலகளந்த தமிழர் - 5 : உலகம் யார் கையில்
ஓங்கி உலகளந்த தமிழர் - என்னுரை ஓங்கி உலகளந்த தமிழர் - என்னுரை
திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு !! திருவள்ளுவர் பிறந்த நாளை தேசிய விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு !!
திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவியுங்கள் !! உத்தரகண்ட் எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தல் !! திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவியுங்கள் !! உத்தரகண்ட் எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.