LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
-

பழம் யாருக்கு?

அதியன் என்ற அரசன் நாட்டைச்
சுதிவில காமல் சுகமாய் ஆண்டான்,
கதியென் றவனது காவலி னுள்ளே
மதிசேர் மக்கள் மகிழ்ந்தே வாழ்ந்தார்!

அதியன் நாட்டின் அருகே ஆங்கோர்
அதிசய நெல்லி அரிதாய்க் காய்க்க
குதித்தே மகிழ்ந்தார் குறிஞ்சித் தமிழர்,
‘பதியே, மன்னா, பார்நீ’ என்றார்.

‘வளமை தருமிவ் வண்ணப் பழத்தால்
இளமை என்றும்; இல்லை மரணம்,
அளவில் புகழோய், அரசே உனக்காய்
உளமே கனிந்து உதிர்த்தது மரமே!’

மன்னன் பழத்தை மகிழ்ந்தே பார்த்தான்,
தின்னத் துடித்தான் திகட்டாக் கனியை!
‘என்னை விடவும் இதனை உண்ண
இன்னும் தகுதி எவர்க்குண் டெ’ன்றான்!

அப்போ தங்கே அவ்வை வந்தார்,
செப்பில் லாத செம்பொன் போலே
ஒப்பில் லாத உயர்ந்த தமிழால்,
செப்பும் கவிதை சிறந்தே திகழ!

அவரைக் கண்ட அரசன் மகிழ்ந்தான்,
உவந்தே பழத்தை உடனே தந்தான்,
அவையில் இருந்த அறிஞர் திகைத்தார்
அவச்சொல் பேசி அவலை இடித்தார்!

மன்னன் சிரித்தான், ‘மற்றவர் போலே
சின்னப் பயல்நான், சிந்தைப் பசிக்கு
அன்னம் போடும் அவ்வை முன்னே!
என்றும் வாழ ஏற்றது தமிழே!’

பழத்தைத் தின்ற பாட்டியும் வாழ்ந்தனள்,
பழத்தைத் தந்தோன் பண்பும் வாழ்ந்தது,
பழகப் பழகப் பரக்கும் மனமே,
அழகே அதுதான் அறிவாய் மனமே!

by Swathi   on 19 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.