பொதுவாக சிவன் கோயில் பிரகாரத்தில் ஈசான திசையில் (வடகிழக்கு) நவக்கிரக சன்னதி அமைந்திருக்கும். ஆனால், இங்கு ஊரின் எல்லையில் ஈசான்ய
திசையில், தனிக்கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு இடைக்காடர் தவக்கோலத்தில் இருக்கிறார்.பங்குனி உத்திரத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்
நடக்கிறது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுப்பதுடன், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது விசேஷம்.கிருத்திகை நட்சத்திரத்தின்போது
முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் புறப்பாடாகிறார். தமிழ் மாதப்பிறப்பின்போது இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
வைகையின் வடகரையில் அமைந்த கோயில் இது. இத்தலத்து சிவன் தன்னை வணங்கும் பக்தர்களின் ஆழ் மனம் கண்டு, அருள் செய்பவராக இருக்கிறார்.
எனவே இவர் "ஆழிகண்டீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு மணிகண்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் சவுந்தர்யநாயகி தனிசன்னதியில்
இருக்கிறாள்.பொதுவாக விநாயகர் சன்னதி எதிரே மூஞ்சூறுதான் இருக்கும். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு எதிரே யானை இருக்கிறது. இந்த அமைப்பு மிக
விசேஷமானது.
பொதுவாக சிவன் கோயில் பிரகாரத்தில் ஈசான திசையில் நவக்கிரக சன்னதி அமைந்திருக்கும். ஆனால், இங்கு ஊரின் எல்லையில் ஈசான்ய திசையில், தனிக்கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு இடைக்காடர் தவக்கோலத்தில் இருக்கிறார். பங்குனி உத்திரத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுப்பதுடன், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது விசேஷம்.
கிருத்திகை நட்சத்திரத்தின்போது முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் புறப்பாடாகிறார். தமிழ் மாதப்பிறப்பின்போது இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. வைகையின் வடகரையில் அமைந்த கோயில் இது. இத்தலத்து சிவன் தன்னை வணங்கும் பக்தர்களின் ஆழ் மனம் கண்டு, அருள் செய்பவராக இருக்கிறார். எனவே இவர் "ஆழிகண்டீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
இவருக்கு மணிகண்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் சவுந்தர்யநாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். பொதுவாக விநாயகர் சன்னதி எதிரே மூஞ்சூறுதான் இருக்கும். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு எதிரே யானை இருக்கிறது. இந்த அமைப்பு மிக விசேஷமானது. |