வேம்பத்தூரில் கவிராஜபண்டிதர் என்னும் பக்தர் அம்பிகையை உபாசித்து வந்தார். இவர் ஒருமுறை காசி கிளம்பினார். அவருடைய மகளும் உடன் சென்றாள்.
பாதிவழியில், அம்பாளே அவரது மகளாக உடன் சென்றாள். நிஜமகள் வீட்டுக்கு வந்துவிட்டாள். யாத்திரையின் போது, மகளுக்கு கைநிறைய வளையல் வாங்கிக்
கொடுத்தார். ஆனால், ஊருக்கு திரும்பும் போது, மகளாக வந்த அம்பிகை மறைந்துவிட்டாள். உண்மை மகளிடம்,நான் வாங்கிக் கொடுத்த வளையல் எங்கே?
என்று கேட்டார். ஆனால் அவளோ, எனக்கு எப்போது வளையல் வாங்கித் தந்தீர்கள்? என்று கேட்டாள். அப்போது, அம்பிகை, இதோ இருக்கிறது வளையல்! என்று
கையசைத்து மறைந்தாள். அம்பிகையே தன்னுடன் காசி வந்ததை அறிந்த கவிராஜ பண்டிதர் வியப்பில் ஆழ்ந்தார். இவர் ஆதிசங்கரர் எழுதிய சவுந்தர்ய
லஹரியைத் தமிழில் மொழிபெயர்த்தார். வேம்பத்தூரில் இருந்து 40கி.மீ., தொலைவில் வீரசோழத்தில் இவருக்கு ஜீவசமாதி உள்ளது. அதனை ஐயர் சமாதி என்று
குறிப்பிடுகின்றனர்.தமிழ்த்தாத்தா உ.வே.சா., இலக்கியங்களைத் தொகுக்கும் போது, இலக்கியச் சுவடிகளைத் தேடி இவ்வூருக்கு வந்திருக்கிறார். செய் என்பதற்கு
வயல் என்பது பொருள். இங்கு கம்பர் செய், கூத்தன் செய், பரணர் வாய்க்கால், காளமேகத் தார், அவ்வை திடல் என்று புலவர்களின் பெயர்களில் இடங்கள்
இன்றும் உள்ளன. வேம்பத்தூர் குமணனார், கண்ணன் கூத்தனார் போன்ற சங்க புலவர்கள் இவ்வூரை சேர்ந்தவர்கள்.
வேம்பத்தூரில் கவிராஜபண்டிதர் என்னும் பக்தர் அம்பிகையை உபாசித்து வந்தார். இவர் ஒருமுறை காசி கிளம்பினார். அவருடைய மகளும் உடன் சென்றாள். பாதிவழியில், அம்பாளே அவரது மகளாக உடன் சென்றாள். நிஜமகள் வீட்டுக்கு வந்துவிட்டாள். யாத்திரையின் போது, மகளுக்கு கைநிறைய வளையல் வாங்கிக் கொடுத்தார். ஆனால், ஊருக்கு திரும்பும் போது, மகளாக வந்த அம்பிகை மறைந்துவிட்டாள்.
உண்மை மகளிடம்,நான் வாங்கிக் கொடுத்த வளையல் எங்கே? என்று கேட்டார். ஆனால் அவளோ, எனக்கு எப்போது வளையல் வாங்கித் தந்தீர்கள்? என்று கேட்டாள். அப்போது, அம்பிகை, இதோ இருக்கிறது வளையல்! என்று கையசைத்து மறைந்தாள். அம்பிகையே தன்னுடன் காசி வந்ததை அறிந்த கவிராஜ பண்டிதர் வியப்பில் ஆழ்ந்தார். இவர் ஆதிசங்கரர் எழுதிய சவுந்தர்ய லஹரியைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
வேம்பத்தூரில் இருந்து 40கி.மீ., தொலைவில் வீரசோழத்தில் இவருக்கு ஜீவசமாதி உள்ளது. அதனை ஐயர் சமாதி என்று குறிப்பிடுகின்றனர். தமிழ்த்தாத்தா உ.வே.சா., இலக்கியங்களைத் தொகுக்கும் போது, இலக்கியச் சுவடிகளைத் தேடி இவ்வூருக்கு வந்திருக்கிறார். செய் என்பதற்கு வயல் என்பது பொருள். இங்கு கம்பர் செய், கூத்தன் செய், பரணர் வாய்க்கால், காளமேகத் தார், அவ்வை திடல் என்று புலவர்களின் பெயர்களில் இடங்கள் இன்றும் உள்ளன. |