இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில், திரிசூல மலையில் கோரக்கநாதர் கோயில், ராமநதி அணை அருகில்
வில்வவனநாதர் கோயில், திருவாலீஸ்வரம், கடனா நதி, ராமநதி, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய பஞ்ச
மூர்த்தி ஸ்தலங்கள் உள்ளன. கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி அரளிப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை
செய்து வழிபட்டால் விபத்து, நோயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்காக அம்பாளை வேண்டிக் கொண்டால் குடும்ப உறுப்பினராக அம்மன் இருந்து
காப்பதாக நம்பிக்கையுள்ளது.முன்னோர் நினைவாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்று சுவாமி அம்பாளுக்கு பெயர் சூட்டினர். அந்த ஊருக்கு சிநேகபுரி என
பெயரிட்டனர். பிறகு அன்பு நகர் என்றாகி தற்போது ஆம்பூர் எனப்படுகிறது. ஆம்பு என்றால் காஞ்சோன்றி என்னும் செடி வகையைக் குறிக்கும். இந்த செடிகள்
ஒரு காலத்தில் இங்கு அதிகம் இருந்ததால் ஆம்பூர் என பெயர் வந்திருக்கலாம்.
இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில், திரிசூல மலையில் கோரக்கநாதர் கோயில், ராமநதி அணை அருகில் வில்வவனநாதர் கோயில், திருவாலீஸ்வரம், கடனா நதி, ராமநதி, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய பஞ்ச மூர்த்தி ஸ்தலங்கள் உள்ளன.
கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி அரளிப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் விபத்து, நோயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்காக அம்பாளை வேண்டிக் கொண்டால் குடும்ப உறுப்பினராக அம்மன் இருந்து காப்பதாக நம்பிக்கையுள்ளது.
முன்னோர் நினைவாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்று சுவாமி அம்பாளுக்கு பெயர் சூட்டினர். அந்த ஊருக்கு சிநேகபுரி என பெயரிட்டனர். பிறகு அன்பு நகர் என்றாகி தற்போது ஆம்பூர் எனப்படுகிறது. ஆம்பு என்றால் காஞ்சோன்றி என்னும் செடி வகையைக் குறிக்கும். இந்த செடிகள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் இருந்ததால் ஆம்பூர் என பெயர் வந்திருக்கலாம். |