மகாகவி பாரதியார் இக்கோயில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற புகழ் பெற்ற
பாடலை எழுதினார்.இது ஒரு சிவாலயமாயினும், ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் பல இங்குள்ளன. ஒருமுறை, தசரதர் காட்டில் வேட்டையாடிக்
கொண்டிருந்தார். அப்போது, சிரவணன் என்ற சிறுவன் கண்ணிழந்த தன் பெற்றோருக்காக காட்டிலுள்ள ஒரு சுனையில் தண்ணீர் எடுக்க வந்தான். சுனையில்
தண்ணீர் சப்தம் கேட்ட தசரதர், ஏதோ மிருகம் தான் தண்ணீர் குடிக்கிறது என தவறாக நினைத்து, ஒரு அம்பை அந்த திசையை நோக்கி எய்தார். அது சிரவணன்
மீது பட்டு அவன் இறந்தான். அவனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட தசரதரிடம், ""எங்களைப் போலவே நீயும் புத்திர சோகத்தால் இறப்பாய்,'' என்று சாபமிட்டு
மடிந்தனர். தசரதர் வில்வவனநாதரை வணங்கி தன் பாவத்துக்கு மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவமே இங்குள்ள வனத்தில் நிகழ்ந்ததாக தல வரலாறு
கூறுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இப்பகுதியிலுள்ள குகை ஒன்றில் சுனை ஒன்றும் உள்ளது. இப்போது கூட கோயில் இருக்கும் இடம் அமைதியான
வனமாக உள்ளது. இக்கோயில் கதவில் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளது.
மகாகவி பாரதியார் இக்கோயில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார். இது ஒரு சிவாலயமாயினும், ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் பல இங்குள்ளன. ஒருமுறை, தசரதர் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிரவணன் என்ற சிறுவன் கண்ணிழந்த தன் பெற்றோருக்காக காட்டிலுள்ள ஒரு சுனையில் தண்ணீர் எடுக்க வந்தான்.
சுனையில் தண்ணீர் சப்தம் கேட்ட தசரதர், ஏதோ மிருகம் தான் தண்ணீர் குடிக்கிறது என தவறாக நினைத்து, ஒரு அம்பை அந்த திசையை நோக்கி எய்தார். அது சிரவணன் மீது பட்டு அவன் இறந்தான். அவனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட தசரதரிடம், ""எங்களைப் போலவே நீயும் புத்திர சோகத்தால் இறப்பாய்,'' என்று சாபமிட்டு மடிந்தனர். தசரதர் வில்வவனநாதரை வணங்கி தன் பாவத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
இந்த சம்பவமே இங்குள்ள வனத்தில் நிகழ்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இப்பகுதியிலுள்ள குகை ஒன்றில் சுனை ஒன்றும் உள்ளது. இப்போது கூட கோயில் இருக்கும் இடம் அமைதியான வனமாக உள்ளது. இக்கோயில் கதவில் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளது. |