LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை நூல்கள் (Tamil Isai Books)

தமிழிசையின் அரிய நூல்கள்!

கருணாமிருத சாகரம்:
இந்நூலை இயற்றியவர் மு.ஆபிரகாம் பண்டிதர். இசைத் தமிழ் வரலாற்றையும் ஒலித் தத்துவத்தையும் கூறும் நூலாகும்.

பஞ்ச மரபு:

இதனை எழுதி யவர் அறிவனார். இந்நூல் வாச்சிய மரபு, தாள மரபு, நிருத்திய மரபு, இசை மரபு, அவிநய மரபு என்ற ஐந்து மரபுகளை விவரித்துக் கூறும் நூலாகும்.

யாழ் நூல்:
இந்நூலை எழுதியவர் விபுலானந்தர். இசைத் தமிழிற்குரிய நுணுக்கங்களைத் தெரிவிக்கும் கருவியான யாழைப் பற்றி முழுமையாக அறியக்கூடிய நூலாகும்.

சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம்:
எழுதியவர் சங்கீதபூஷணம் எஸ்.ராமநாதன். அரும்பதவுரை ஆசிரியரும் அடியார்க்குநல்லாரும் கூறிய கருத்துக்களை ஆய்வு செய்து எழுதிய நூலாகும்.

சுருதி வீணை:
எழுதியவர் விபுலானந்தர். இந்நூலில் ஒலிகளின் ஒலிப்புகளையும் அதிர்வுகளையும் தனித்தன்மையையும் பரிவு சப்த அலைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

பூர்வீக சங்கீத உண்மை:

நாகசுர வித்வான் மதுரை  எம்.கே.எம். பொன்னுசாமிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது. பன்னிரண்டு ஒலி நிலைகளை வைத்து 32 பாலைகள்தான் இசைத் தமிழுக்கே உரித்தானது என்று பல சான்றுகளைக் கூறி நிறுவி உள்ளார்.

by Swathi   on 09 Nov 2017  0 Comments
Tags: Tamil Isai   Tamil Isai Noolgal   தமிழிசை   தமிழிசை நூல்கள்           
 தொடர்புடையவை-Related Articles
தமிழிசையின் அரிய நூல்கள்! தமிழிசையின் அரிய நூல்கள்!
அமெரிக்க தலைநகரில் தமிழிசையும் பரதமும்... அமெரிக்க தலைநகரில் தமிழிசையும் பரதமும்...
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.