LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருக்குறள்-காமத்துப்பால் வழங்கும் வாழ்வியல் பாடங்கள் - குறள் மணம் செ. வரதராசனார்

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-30

நாள்: 15/09/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: திருக்குறள்-காமத்துப்பால் வழங்கும் வாழ்வியல் பாடங்கள்
ஆசிரியர்: 'குறள் மணம்' செ. வரதராசனார்

திருக்குறள் 'இன்பத்துப்பால்' காதல் வாழ்வை மட்டுமல்ல, வாழ்வியல் பாடங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறது எனக் காட்டுகிறது இந்நூல். காமத்தின் இனிமையை எடுத்துரைக்கும்போதே, திருவள்ளுவர் சமுதாயப் படிப்பினைகளை எடுத்துக்கூறுவதாகக் கூறுகிறார் ஆசிரியர். இருபது கட்டுரைகளில் திருக்குறள் காட்டும் வாழ்வியல் பாடங்களை வடிக்கிறார் ஆசிரியர். 'குறள்மணம்' திங்கள் இதழை நடத்தியதால் "குறள் மணம்"வரதராசனார் என தமிழ்ச் சான்றோரால் அழைக்கப்படும் ஆசிரியர், 'திருக்குறள் நெறித் தோன்றல்' (தமிழக அரசு) மற்றும் 'திருவள்ளுவர் சீர்பரவுவார்' போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசு 2012 ஆண்டு திருவள்ளுவர் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.இந்நூலை குறள்மணம் (2006) பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நூல் அறிமுகம் செய்வார்: 'நற்றமிழ்' செ.வ. இராமாநுசன்

நூலாசிரியர் புலவர் செ.வரதராசனார் அவர்களின் புதல்வர். கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். இராணுவப் பொறியியல் துறையில் 38 ஆண்டுகள் பொறியாளராக சேவையாற்றி பணி நிறைவு செய்துள்ளார். எங்கும், எப்போதும் தூய தமிழில் உரையாடி வருபவர். பல்வேறு தமிழ்ச் சங்கங்களில் பொறுப்புகளை வகித்து தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றார். குறள்வழியில், தமிழ்த் திருமணங்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தி வைக்கின்றார். தொலைக்காட்சியில் ஓராண்டிற்கும் மேலாக நாள்தோறும் 'வள்ளுவர் வாக்கு' பகுதியில் குறள்-பொருள்-எடுத்துக்காட்டு கதை வழங்கியுள்ளார். 'நற்றமிழ்' மற்றும் 'செந்தமிழ் செம்மல்' ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள் மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள்
தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்! தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்!
வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் வலைத்தமிழ் பதிப்பகத்தின் இரண்டாவது திருக்குறள் நூல் -கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்
திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை திருக்குறள் உலகப்பரவலாக்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புகள் குறித்த ஆய்வுப் பார்வை
மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு, மதிப்பிற்குரிய தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு,
பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்  நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. பர்மீஸ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் நம் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார் பிரான்ஸ் முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் , திருக்குறள் பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் தொகுப்பாசிரியருமான திரு.கோவிந்தசாமி செயராமன் நூலை வழங்கிறார்
நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்.. நன்னெறிக் கல்வியில் திருக்குறள் முற்றோதல் கற்றுத்தர அறிவுறுதியுள்ள பள்ளிக்கல்வித் துறைக்கு பாராட்டுகள்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.