LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

தொழில் வளம் கண்ட தூயவர்

ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து கேள்வி கேட்டார் . மிக மிகக் குறுகிய காலத்தில் பல கோடிக்கு அதிபதி ஆவது எப்படி ?

“உழைப்பால்”என்றான் முதல் மாணவன். “தவறு”என்றார் ஆசிரியர். “வியாபாரத்தால்”என்றான் மற்றவன். “அதுவும் தவறு”என்று கூறிவிட “கடத்தல் மூலம்”என்றான் மற்றவன். ஆசிரியர் “நோ”என்றார் கடைசியாக அமர்ந்திருந்த பையன் அமைதியாக எழுந்து, “நான் அரசியலில் சேர்ந்து அமைச்சராகி சம்பாதித்து விடுவேன்”என்றதும், “வெரிகுட்”சரியான விடை என்றார் ஆசிரியர். அரசியலுக்கு வருவதே பணம் சம்பாதிப்பதற்குத்தான் என்ற நிலைமை நிலவுகின்ற நாட்டில் மக்கள் பணி ஒன்றே வாழ்வின் லட்சியம் என்று வாழ்ந்தவர் பெருந்தலைவர்.

தொழில் வளர்ச்சிதான் நாட்டை முன்னேற்றும் என்பதை உணர்ந்த பெருந்தலைவர் , கோடிக்கணக்கான மூலதனம் போட்டுப் பல தொழிற்சாலைகளை அரும்பாடுபட்டு உருவாக்கினார் . நெய்வேலி நிலக்கரி திட்டம் , நீலகிரி கச்சா பிலிம் தொழிற்சாலை , கிண்டி ரண சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை , சர்க்கரை ஆலைகள் , சோடா உப்புத் தொழிற்சாலைகள் , சிமெண்ட் தொழிற்சாலைகள் , ஆவடி ரெயில்வே வாகன தொழிற்சாலைகள் , மேட்டூர் காகிதத் தொழிற்சாலை ஆகியவை பெருந்தலைவர் ஆட்சியில் ஏற்பட்டன . நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இவை பயன்பட்டன .

1955-61 ல் 13,300 கிராமங்கள் மின்சார வசதி பெற்றன . நீர்ப்பாசன வசதிக்காக மின்சாரம் பயன்படுதல் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் அதிகம் . மின்சாரம் உயயோகிக்கும் மாநிலங்களில் தமிழகமே முதலிடம் பெறுகின்றது .

1959 இல் 27 கோடி ரூபாய் செலவில் சென்னை மின்சார நிலையம் விரிவுபடுத்துபட்டது . 9 கோடி ரூபாய் செலவில் பெரியாறு நீர் மின்சாரத்திட்டம செய்து முடிக்கப்பட்டது . இத்திட்டத்தின் மூலம் 1 லட்சம் கிலோ வாட் மின்சக்தி உற்பத்தியானது .

குந்தா திட்டம் 3.5 கோடி ரூபாய் செலவில் அமைந்தது . இத்திட்டம் மற்ற நாடுகளும் பார்த்து அதிசயிக்கக் கூடிய முறையில் வெகு விரைவில் நமது எஞ்சீனியர்களால் கட்டி முடிக்கப்பட்டது . இதை நேருஜி துவக்கி வைத்தார் . இவ்வாறு பெருந்தலைவர் ஆட்சி காலத்தில் தொழிற்துறை பொற்காலம் என்றே சொல்லத்தக்க அளவில் முன்னேறியது .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.