LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை

தெய்வ வள்ளுவர் வான்மறை செய்தார்
இன்று தமிழகச் சட்டசபையில் வள்ளுவரது உருவப் படம் தொங்கவிடப்பட்டிருக்கிறது. வள்ளுவர் சிலைகள் பல எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையிலே திருக்குறளைப் பொறிக்க வேண்டுமென்ற குரலும் கேட்கிறது. ஆனால், எத்தனையோ பெருமைகளுக்கு உரியவராகிவிட்ட திருவள்ளு வருக்கு ஒரு பெரிய குறை உண்டு. தமிழ்நாடும் அதன் மக்களும் அவரது கருத்துக்களாற் பெறவேண்டிய, பெறக் கூடிய பயனைப் பெறாமையே அக்குறையாகும்; உறுபசியும் ஓவாப்பிணியும்' நீங்கவில்லை. 'இன்மையெனவொரு பாவி" வளர்கிறான். கல்லாமை, களவு, இன்னாசெய்தல், அழுக்காறு புறங்கூறல் முதலியவை ஒழிந்தபாடில்லை. இந்நிலைமைக்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். இந்நிலை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நீடிக்கும்போது, திருக்குறளாற் பயன டைய வாருங்கள் என்று பிறரைக் கூவியழைப்பதில் என்ன சிறப்பிருக்கிறது?
 
திருவள்ளுவருக்குப் பெருமைதேடுகிறோமென்ற நினைப் போடு அவரது புகழைச் சத்தம் போட்டுக் கூறுவதிலோ அல்லது திருவள்ளுவருக்குக் கைமாறு செய்கிறோமென்ற நினைப்போடு இறந்துபோனவர்களுக்குத் திவசம் கொடுப்பது போல, ஆண்டுதோறும் அவருக்கு விழாவெடுப்பதிலோ என்ன பெருமையிருக்கிறது?
 
திருவள்ளுவரின் பெயரைச் சொல்லித் தமிழ்மக்கள் பெருமைப்பட்டது போதும். திருவள்ளுவராலே தமிழ் மக்கள் பயன் பெற்றுச் சிறப்படைவார்களேயானால், அது திருவள்ளுவருக்குப் பெருமை சேர்ப்பதாகும். திருவள்ளுவர் காட்டிய வழியிலே தமிழர் வாழ்வு அமையுமேயானால், அதுவே திருக்குறளின் உண்மையான பயனையும் பெருமை யையும் உலகுக்கெல்லாம் எடுத்துக் காட்டுவதாகும். எந்தத் தமிழ் மக்களுக்குத் திருக்குறள் வான்புகழீட்டிக் கொடுத்ததோ அந்தத் தமிழ் மக்கள் திருக்குறளாற் பயனெய்தத் தவறிவிட்டனர் என்று உலகம் பழியாதோ?
 
சி தில்லை நாதன்
விரிவுரையாளர்
இலங்கைப் பல்கலைக்கழகம்
(1967)
(வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை நூலிலிருந்து....)
by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.