LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

வெற்றிப் படிகளில் கக்கன்

 கக்கன் பொதுத் தொண்டின் மூலம் மக்களைச் சந்தித்து மக்கள் தொண்டன் என்று பெயர் பெற்றார் . தன்னலமற்ற தொண்டைச் செய்தமையால் இவர்தம் பணிகளில் தடைகள் வந்ததாகத் தெரியவில்லை . அப்படி வந்த தடைக்கற்களையும் படிக்கட்டுகளாகக் கொண்டு முன்னேறினார் . மிகச்சிறந்த சமுதாயத் தலைவர்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பு அதற்கு வழியமைத்துக் கொடுத்தது . இரவுப்பள்ளி , மக்களிடம் கல்வி , தன்னலமற்ற பொதுத்தொண்டு என்று மக்களிடையே பேரும் புகழும் வளர்ந்து வரும் சூழலில் ‘மாவட்டக் கழக உறுப்பினர்’ (District Board Member) தேர்தல் வந்தது . 1941-42 காலக்கட்டத்தில் நடைபெற்ற இத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர் பட்டியல் தெரிவு செய்யப்பட்டது . அப்பட்டியலில் மேலூர் வட்டத்தில் கக்கன் போட்டியிட அனைத்துத் தலைவர்களாலும் முடிவு செய்யப்பட்டது .

இந்தத் தேர்தலில் இவரே விரும்பிப் போட்டியிட்டார் என்று சொல்ல முடியாது . இவர் தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும் . இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன . இவர்தம் உண்மையான தன்னலமற்ற தொண்டும் அதனால் மக்கள் இவர்மீது கொண்ட நம்பிக்கையும் முதற்காரணமாகும் . மற்றொன்று எதிரணி வேட்பாளரான மதுரை மேலூர் வையாபுரி அம்பலம் அவர்களின் மீது மக்களும் தலைவர்களும் கொண்டிருந்த எதிர்ப்பு இரண்டாவது காரணமாகும் . இந்த இரண்டு காரணங்களும் உண்மை என்றாலும் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர் மேல்தட்டுக்காரரை எதிர்ப்பது என்ற சூழலைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது .

மேலும் அன்றைய சமுதாய ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார நிலை ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டார் என்று எடுத்துக் கொள்வதே உண்மையானதாக இருக்கும் . எப்படி இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டார் .

வைத்தியநாதய்யர் , என் . எம் . ஆர் . சுப்புராமன் , கருப்பன் செட்டியார் ஆகியோரின் பின்புலத்தோடு தேர்தல் களத்தில் நின்றாலும் ஓர் அம்பலவர் இனத்தவரை எதிர்த்து , தாழ்த்தப்பட்ட இனத்தவர் ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும் .

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அதிலும் நாடு விடுதலை பெற்று 50 ஆண்டுகள் கடந்த பின்னும் , சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சட்டங்கள் வந்த பின்னும் நெஞ்சைப் பிளக்கும் இனக்கொடுமைகளை நம்மால் காணமுடிகிறது . மக்களாட்சி முறையில் நடக்கும் சிறு ஊராட்சித் தேர்தலில் ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகன் வேட்பு மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படாத அளவிற்குத் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன . இக்கொடுமையைத் தட்டிக் கேட்கவோ , தடுத்து நிறுத்தவோ எவரும் முன்வருவதில்லை . சமுதாயச் சுய மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அமைப்புகள் கூட முன்வருவதில்லை . இன்றுகூட இவ்வாறு நடக்கிறதென்றால் , ஒர் அறுபது ஆண்டுகளுக்கு முன் சமுதாயக் கொடுமைகளும் அதையொட்டிய நடைமுறைகளும் எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது . காரணம் மேற்சொன்ன இனக் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மேலவளவு கிராமம் கக்கன் பிறந்த தும்பைப்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது . அதிலும் கக்கன் போட்டியிட்ட மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தல் வட்டத்தில் மேலவளவும் அடங்கும் .

விடுதலைக்குப் பின் சட்டம் வாயிலாக இடஒதுக்கீடு வந்த பின்னும் , நடைமுறை படுத்தவிடாமல் தடுக்கப்பட்ட அரசியல் உரிமையை , விடுதலை பெறாத காலத்தில் சட்டம் வாயிலாக உரிமைகள் பாதுகாக்கப்படாத காலத்தில் மிகப் பெரிய உரிமையை வழங்கி மகிழ்ந்த அக்காலச் சமுதாயத் தலைவர்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.