இத்தலத்தில் தாயாருக்கு வில்வத்தால் பூஜை செய்யப்படுகிறது.இப்பகுதியை சோழமன்னன் ஒருவன் ஆட்சி செய்தபோது, நாட்டில் மழை வளம் பொய்த்து,
நீர்நிலைகள் வற்றியது. இதனால், மக்கள் பஞ்சத்தில் வாடினர். நாட்டில் குறைவிலாது மழை பெய்து, மக்கள் வாழ்வில் சிறக்க அருளும்படி மன்னர்,
மகாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொண்டார். அவருக்கு காட்சிதந்த விஷ்ணு, மழைவளம் அருளினார். நாடு செழித்தது. மக்களுக்கு அருளிய மகாவிஷ்ணுவிற்கு
மன்னர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். இத்தலத்திற்கு அருகில் சிவாலயம் ஒன்று உள்ளது. சைவம், வைணவத்தை இணைக்கும் விதமாக இவ்விரு
ஆலயங்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வூர் முன்பு சிவனின் திருப்பெயரான "சங்கரன்', பெருமாளின் திருநாமமான "ராமன்' என்ற
பெயர்களை இணைத்து "சங்கரராமநல்லூர்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சைவ, வைணவ இணைப்புத்தலமென்பதால், சுவாமிக்கு வலப்புறம் அமர்ந்த
கோலத்தில் உள்ள வேதவல்லி தாயாருக்கு வில்வஇலைகளைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகிறது.
இத்தலத்தில் தாயாருக்கு வில்வத்தால் பூஜை செய்யப்படுகிறது. இப்பகுதியை சோழமன்னன் ஒருவன் ஆட்சி செய்தபோது, நாட்டில் மழை வளம் பொய்த்து, நீர்நிலைகள் வற்றியது. இதனால், மக்கள் பஞ்சத்தில் வாடினர். நாட்டில் குறைவிலாது மழை பெய்து, மக்கள் வாழ்வில் சிறக்க அருளும்படி மன்னர், மகாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொண்டார். அவருக்கு காட்சிதந்த விஷ்ணு, மழைவளம் அருளினார். நாடு செழித்தது.
மக்களுக்கு அருளிய மகாவிஷ்ணுவிற்கு மன்னர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். இத்தலத்திற்கு அருகில் சிவாலயம் ஒன்று உள்ளது. சைவம், வைணவத்தை இணைக்கும் விதமாக இவ்விரு ஆலயங்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வூர் முன்பு சிவனின் திருப்பெயரான "சங்கரன்', பெருமாளின் திருநாமமான "ராமன்' என்ற பெயர்களை இணைத்து "சங்கரராமநல்லூர்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
சைவ, வைணவ இணைப்புத்தலமென்பதால், சுவாமிக்கு வலப்புறம் அமர்ந்த கோலத்தில் உள்ள வேதவல்லி தாயாருக்கு வில்வஇலைகளைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகிறது. |