LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

ஏழை பங்காளன்

டெல்லிக்கு வேலைக்குப் போன ஒருவன் . தன் தாயாருக்காக 500 ரூபாய்க்குப் புடவை வாங்கி அனுப்பினான் . உண்மையான விலையை எழுதினால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டாயே என்று அம்மா திட்டுவார்கள் என்று பயந்து புடவையின் விலை 300 ரூபாய் என்று எழுதினான் . அடுத்த வாரம் அவனது அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது . நீ அனுப்பிய புடவையை 400 ரூபாய்க்கு விற்று விட்டேன் . அதற்கு இங்கு நல்ல டிமாண்ட உள்ளது . இன்னும் பத்துப் புடவைகளை உடனே அனுப்பவும் . இப்படி எதையும் லாபமாக்கத் துடிப்பது பொதுவான மனித இயல்பு . இதிலிருந்து மாறுபட்டு நிற்பவர்கள் ஒரு சிலரே . அதில் பெருந்தலைவர் காமராசர் முதன்மையானவர் .

ஆராய்ச்சி மணி கட்டி ஆண்ட முற்காலத் தலைவர்கள் போலவே ஏழைகளின் குறைகளைக் கேட்டறிய எப்போதும் தன் வீட்டுக் கதவைத் திறந்து வைத்திருந்தார் கர்ம வீரர் காமராசர் . காண வருவோரை உடன் இருப்பவர் தடுத்தால் அவர்களைக் கண்டித்து , கந்தா அவரை வர விடுன்னேன் . அவர் வரட்டுன்னேன் . என்று கூறி குறை கேட்க முந்தும் கருணைத் தலைவராகவே அவர் விளங்கினார் . இது குறித்து நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர் சோமயா ஜு லு கூறுகிறார் .

இவரின் இல்லமே ஒரு தேசிய இல்லம் தான் . முன்புறக் கதவுகள் சாத்தப்படுவதே இல்லை ஒரு தலைவர் இறந்த பிறகே அவர் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடமையாக்குவார்கள் . ஆனால் காமராசரைப் பொறுத்தவரை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது உள்ளமும் இல்லமும் நாட்டுடமையாகியிருந்தன .

பெருந்தலைவர் கூறுகிறார் , கோடி வைத்திருப்பவனைக் கோடீஸ்வரன் என்று புகழ்கிறார்கள் . பணம் படைத்தவன் என்பதற்காக ஒருவனை கடவுளாக்கி விடும் இந்தப் புத்தி நன்மையைத் தராது .

தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த ஒரு சமயம் அவ்விடத்தைப் பார்வையிட அதிகாரிகளுடன் சென்றார் பெருந்தலைவர் . அதிகாரிகள் தடுத்தும் தண்ணீரில் இறங்கி வெகுதூரம் சென்று விட்டார் . ஒரு முதல்வரா இப்படிச் செய்வது ? சம்பிரதாயம் என்னாவது என்று அதிகாரிகள் கையைப் பிசைந்தனர் .

இதை நேரில் பார்த்த சவுந்தரபாண்டியன் என்பவர் ஒரு பேட்டியில் கூறுகிறார் .

பேசிக்கொண்டேயிருந்த பெருந்தலைவர் திடீரென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மேல் துண்டை எடுத்து முண்டாசு கட்டிக்கொண்டு மட மட வென்று தண்ணீருக்குள் இறங்கி விட்டார் .

இப்படிப்பட்ட கடமை வீரர் பெருந்தலைவர் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.