கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அந்த காலத்தில் அத்திரி வனம் என்று பெயர். அந்த காட்டில் கண்வர் தவம் செய்ய வந்தார். தவம் செய்து கொண்டிருக்கும் போது தேவகண்டகவன் என்ற யக்ஷன் சாபம் ஏற்பட்டு புலித் தலை , மனித உடம்போடு அலைந்த கொண்டிருந்ததால் கண்வர் ரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் துன்பம் ஏற்பட்ட கண்வ ரிஷி திருவேங்கட மலையானை நினைத்து வழிபட்டு தன்னை காக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான்.
திருவேங்கடமலையானும் இவன் புலித் தலையோடு இருந்ததால் வேட்டைக்கார ரூபத்தில் வந்து போரிட்டு டெங்கினி என்ற கதையால் அவரை அடித்து சம்காரம் செய்து முனிவரின் தவத்தை காப்பாற்றினார்.முனிவரின் பிரார்த்தனையின் பேரில் பேட்டைராய சுவாமி என்ற பெயரில் பூதேவி ஸ்ரீ தேவியோடு இங்கு எழுந்தருளியதாக வரலாறு கூறுகிறது.கஜினி முகமது படையெடுப்பின்போது கோயிலில் இருந்த மூலமூர்த்தியை கட்திரைக்குள் மறைத்து வைத்து உற்சவமூர்த்தியை முதுகினில் ஏற்றிக்கொண்டு காட்டில் மறைந்திருந்து பிறகு இந்து அரசர் காலத்தில் திரும்பி உற்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்த புகழ் வேங்கடபதி தாசர் என்பவரைச்சாரும். |