|
||||||||||||||||||
நெத்திலி கருவாடு சம்பால்(anchovy dried fish sambal) |
||||||||||||||||||
தேவையானவை : நெத்திலி கருவாடு -100 கிராம் (சுத்தம் செய்யப்பட்டது) வேர்கடலை -100 கிராம் சர்க்கரை -ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் -100 மில்லி உப்பு -தேவைக்கேற்ப காய்ந்த மிளகாய் -20 சின்ன வெங்காயம் -6 பூண்டு -4 பல் தக்காளி -1 செய்முறை : 1.சூடான எண்ணெயில் நெத்திலி கருவாட்டை பொரித்து பேப்பர் டவலில் வைத்து கொள்ளவும்.அதே எண்ணெயில் வேர்கடலையையும் வறுத்து எடுக்கவும். 2.காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். 3.வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் அரைத்த விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.பச்சை வாசனை போனதும் பொரித்த கருவாடு, கடலை, தேவையான அளவு உப்பு,சர்க்கரை சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை கிளறி இறக்கவும். |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|