|
||||||||
அடை (அ) கார தோசை (adai kara dosa) |
||||||||
தேவையானவை : அரிசி - 4 கப் துவரம் பருப்பு - 1 கப் மிளகாய் வற்றல் - 10 பூண்டு - 5 உப்பு –சிறிதளவு எண்ணெய் - 1 ஸ்பூன் உளுந்து + கடலை பருப்பு - 1 ஸ்பூன் வெங்காயம் - 2 நறுக்கியது கொத்தமல்லி, கருவேப்பிலை-சிறிதளவு செய்முறை 1.முதலில் அரிசி, பருப்பை இராண்டையும்இரவே ஊர வைக்கவும். 2.மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக தோசை மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 3.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவந்ததும், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மாவில் கொட்டி கலக்கவும். 4.இதை வழக்கம்போல் தோசை வார்க்கவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|