|
||||||||
அடை உப்புமா (adai upma) |
||||||||
தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், வெங்காயம் நறுக்கியது - 1 உளுந்து, கடலைப்பருப்பு-சிறிதளவு , தேங்காய் எண்ணெய் -50 கிராம், காய்ந்த மிளகாய் - 7, கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு, பொடித்த வேர்க்கடலை-சிறிதளவு , சீரகம்-சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, துருவிய தேங்காய் - கால் மூடி, , உப்பு - தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஊற வைத்து உப்பு, சீரகம் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். 2.பின்பு ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். 3.அரைத்த விழுதைச் சேர்த்து உதிர் உதிர் ஆக உப்புமா பதம் வரும் வரை கிளறிபொடித்த வேர்க்கடலையைத் தூவி இறக்கவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|