தேவையானவை :
புழுங்கலரிசி - 1 கப் துவரம்பருப்பு - 1/4 கப் கருத்த உளுத்தம்பருப்பு - ஒரு பிடி வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 கறிவேப்பிலை - ஒரு இணுக்கு பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
1. அரிசி ,பருப்பு வகைகளை தண்ணிரில் தனி தனியாக ஊற வைக்கவும். 2. இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் ஊற வைத்த புருப்பு, அரிசியுடன் வெந்தயம்,காயம்,மிளகாய் வற்றல், 4 கறிவேப்பிலை,உப்பு போன்றனவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். கருவேப்பிலை ,பெருங்காயம் , உப்பு சேர்த்து கலக்கவும் . 3. தோசைக்கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும். 4. அவியல்,தேங்காய் சட்னி அல்லது நிலக்கடலைச் சட்னி பொருத்தமாக இருக்கும் .
|