LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

அரைத்த பூசணிக்காய் சாம்பார் (ground pumpkin sambar)

தேவையானவை :


பூசணிக்காய் - ஒரு கீற்று (மெல்லியதாக நறுக்கியது)

துவரம் பருப்பு - 100 கிராம்

கடுகு - அரை டீஸ்பூன்

தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - 1/4 கப்

கறிவேப்பிலை - 2 கொத்து

கொத்தமல்லி - 2 கொத்து

உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 6

கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

புளிகரைசல் - ஒரு கப்

சீனி - 2 டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்


செய்முறை :


1.சீவிய பூசணிக்காய் துண்டுகளை தண்ணீரில் அலசி ஒரு தட்டில் போட்டு இட்லி பானையில் வைத்து ஆவியில் பதினைந்து நிமிடம் வேக வைக்கவும். பூசணிக்காயில் தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்க வேண்டும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் போட்டு இரண்டு நிமிடம் வறுக்கவும். வறுத்த பிறகு ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

3.ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை  போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்த பிறகு அடுப்பில் வைத்து வேக வைத்த பூசணிக்காயை போட்டு அதிகமான தீயில் வைத்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.

4.ஊற வைத்திருக்கும் புளியுடன் உப்பு போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 3 நிமிடம் கழித்து அடுப்பில் குழம்பு கொதிக்கும் போது மிதமான தீயில் வைத்து, அதன் பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து அரைத்த வைத்திருக்கும் விழுதை சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியால் கலக்கி விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். 

5.இரண்டு நிமிடம் கழித்து கொதித்ததும் விருப்பம் உள்ளவர்கள் சீனி 2 டீஸ்பூன் சேர்க்கலாம். அத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். சாம்பார் கொதித்ததும், வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அதை கொதிக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கவும். சுவையான அரைத்த பூசணிக்காய் சாம்பார் ரெடி. 

Ground Pumpkin Sambar

Ingredients for Ground Pumpkin Sambar:

 

Pumpkin-1 Piece (Thinly Sliced)

Red Gram-100 G

Mustard- 1/2 Tsp

Coriander-1 Tbsp

Cumin- 1 Tbsp

Grated Coconut-1/4 Cup

Curry Leaves-2 Bunch

Coriander Leaves-2 Bunch

Salt-1 Tbsp

Dry Chilly-6

Bengal Gram-2 Tbsp

Turmeric Powder-1/2 Tsp

Tamarind Juice-1 Cup

Sugar-2 Tbsp

Oil-1 Tbsp

White Black Gram-1 Tbsp

 

Procedure to make Ground Pumpkin Sambar:

 

1. Wash the sliced pumpkin pieces and boil in idli tawa for 15 minutes. Do not add water to boil.

2. Heat oil in a pan, add coriander, bengal gram, black gram, dry chilly and cumin and saute for 2 minutes. Then spread the fried ingredients in a plate and allow to cool. Then grind them along with grated coconut and 3 table spoon of water in to coarse paste.

3. Take a vessel, add red gram and pour water to cover the dhal. Then place this vessel in a cooker and allow to boil for 15 minutes. Then add turmeric powder. Then add boiled pumpkin and boil in high flame.

4. Mix the tamarind along with salt and water and then filter it. After 3 minutes, allow medium flame and then add tamarind juice. After 1 minute add grinded paste and 1/4 cup of water and stir well and boil for 2 miinutes.

5. After 2 minutes, we can add 2 tea spoon of sugar. Then add curry leaves and coriander leaves and allow to boil for 5 minutes. Heat oil in a pan, add mustard and let to splutter and put in to sambar and then remove from flame. Tasty ground pumpkin sambar is ready.

 

 

 

 

by Shiva   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.