|
||||||||
அரிசி உப்புமா (arisi upma) |
||||||||
தேவையானவை : பச்சரிசி – 1 கப் துவரம் பருப்பு – கால் கப் மிளகு – 2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் – 2 1/2 கப் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணை – 1 டீஸ்பூன் எண்ணை- சிறிதளவு, கடுகு,உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு- சிறிதளவு , காய்ந்த மிளகாய்-தேவைக்கு, பெருங்காயம்- சிறிதளவு, கறிவேப்பிலை-ஒரு ஆர்க்கு, செய்முறை: 1.அரிசி, துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை மாதிரி உடைத்துக் கொள்ளவும். 2.மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். 3.ஒரு கடாயில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். 4.பின்பு தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும். 5.தண்ணீர் கொதிக்கும்போது அரைத்து வைத்திருக்கும் ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி கடாயயை மூடிவிடவும். 6.கடைசியாக அடுப்பை அணைத்ததும், தேங்காய் எண்ணை சேர்த்து பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|