|
||||||||
அவல் உருளை உப்புமா |
||||||||
தேவையானவை : சன்ன அவல் – 1 கப் வெங்காயம் – 1 உருளைக் கிழங்கு – 1 பச்சை மிளகாய் – 3 எலுமிச்சை – அரை மூடி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை-சிறிதளவு தேங்காய்த் துருவல்-சிறிதளவு எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் நிலக்கடலை – 15 சீரகம் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை-ஒரு ஆர்க்கு செய்முறை: 1.முதலில் வெங்காயத்தையும்,உருளைக்கிழங்கையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். 3.பின்பு வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 4.பிறகு உருளைக் கிழங்கோடு, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 5.உருளை வதங்கும் நேரத்தில், அவலை நீரில் அலசி நன்கு வடியவிடவும். வடித்த அவலையும் சேர்த்து மென்மையாகக் கிளறிவிடவும். 6.அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். 7.துருவிய தேங்காயையும், நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|