|
||||||||
கொத்தவரைக்காய்பருப்பு உசிலி (kothavarangai paruppu usili) |
||||||||
தேவையானவை: கொத்தவரைக்காய் = அரை கிலோ துவரம் பருப்பு = 100 கிராம் கடலை பருப்பு = 50 கிராம் உளுத்தம் பருப்பு = 4 ஸ்பூன் சின்ன வெங்காயம் = 50 கிராம் பச்சை மிளகாய் = 2 பூண்டு = 10 பல் இஞ்சி = காலங்குலம் மிளகாய் வற்றல் = 4 தேங்காய் = கால் மூடி சோம்பு = 1 ஸ்பூன் சீரகம் = அரை ஸ்பூன் எண்ணெய் = அரை ஸ்பூன் உப்பு = தேவையான அளவு செய்முறை: 1.முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு சோம்பை பொடி செய்து கொள்ளவும். 2.கடலை பருப்பையும், துவரம் பருப்பையும், உளுத்தம் பருப்பையும் 1 மணி நேரம் ஊற விட்டு நீர் வடித்துக் கொண்டு இஞ்சி, மிளகாய் வற்றலோடு ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். 3.கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 4.இவை நன்றாக வதங்கியதும் அரைத்த பருப்பையும், காயையும், உப்பையும் சேர்த்து வதக்கி வேக வைக்கவேண்டும். 5.இவை எல்லாம் வெந்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறி சோம்பு பொடி , துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும் |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|