|
||||||||
காராமணி இனிப்பு சுண்டல் (karamani sweet sundal) |
||||||||
தேவையானவை: காராமணி – 1 கப் வெல்லம் பொடி செய்தது – 1 கப் ஏலக்காய்த்தூள்-ஒரு சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை தேன் – 1 டேபிள்ஸ்பூன் செய்முறை: 1.முதலில் காராமணி இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். 2.ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத்தூளைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், அதை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். 3.பிறகு வடிகட்டிய வெல்லத்தை அடுப்பிலேற்றி கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். அதில் வெந்த காராமணியைச் சேர்த்து கிளறி விடவும். கடைசியாக ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|