|
||||||||
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (oil brinjal kulambu) |
||||||||
தேவையானவை : சின்ன கத்தரிக்காய் - 4 வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உப்பு கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன் உளுந்து - அரை டீஸ்பூன் மிளகு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 7 தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் வெந்தயம் - கால் டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவைக்கு செய்முறை : 1.முதலில் கத்தரிக்காயை நான்காக நறுக்கி (பிரிக்காமல் காம்போடு வகுந்து வைக்க வேண்டும்) வைக்கவும். 2.கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம், சீரகம், மிளகு,கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். 3.பிறகு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தேங்காய துருவல் சேர்த்து வதக்கி கடைசியாக சாம்பார் பொடி சேர்த்து வதக்கி எடுக்கவும். 4.இவை அனைத்தையும் ஆற வைத்து சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். 5.அரைத்த கலவையை கத்தரிக்காய் நடுவே வைக்கவும். வைத்து நன்றாக அழுத்தி விடவும் அப்போது தான் மசாலா வெளியே வராது. மிச்சம் கலவை இருந்தால்அப்படியே வைக்கவும். 6.கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கத்தரிக்காய்களை போட்டு எல்லா பக்கமும் பிரட்டி விட்டு வதக்கி எடுக்கவும். 7.பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸியில் சுற்றி எடுக்கவும். 8.கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த வெங்காய விழுது சேர்க்கவும். 9.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி அரைத்து ஊற்றி வதக்கவும். 10.பின்பு மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விடவும். 11.இதில் மீதம் இருக்கும் வறுத்து அரைத்த மசாலா, வதக்கி வைத்த கத்தரிக்காய், சிறிது நீர் விட்டு மூடி கொதிக்க விடவும். 12.கத்தரிக்காய் மசாலாவுடன் கலந்து தூளின் பச்சை வாசம் போனதும் புளி கரைசல் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வர கொதிக்க விட்டு எடுக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|