தேவையானவை :
பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கட்டு பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் வரை எண்ணை - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை: 1.முதலில் கீரையை ஆய்ந்து, கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.பின்பு ஒரு குக்கரில் பயத்தம் பருப்பு, மஞ்சள் தூள் தேவையான தண்ணீரைச் சேர்த்து, வேக விடவும். முக்கால் வேக்காடு வந்ததும் எடுத்து வைக்கவும். 3.ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின் மிளகாயை கிள்ளிப் போட்டு சற்று வறுக்கவும். பின்னர் அதில் கீரையைப் போட்டுக் கிளறி சிறு தீயில் வைத்து வேக விடவும்.
4.கீரையிலுள்ள நீரிலேயே வெந்து விடும். உப்பு ,வேக வைத்துள்ள பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, வதக்கி இறக்கி வைக்கவும்.
|