|
||||||||
உருளைக்கிழங்கு பரோட்டா (potato paratha) |
||||||||
தேவையானவை: கோதுமை மாவு: மூன்று கப். உருளைக்கிழங்கு: ஆறு [வேகவைத்தது]. மிளகாப்பொடி: அரை ஸ்பூன். தனியாப்பொடி: ஒரு ஸ்பூன். மஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை. கரம் மசாலா: அரை ஸ்பூன். உப்பு: தேவையான அளவு. எண்ணெய்: தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவினை தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து அதில் எண்ணெய் சிறிது விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும். 2.வேக வைத்த உருளைக்கிழங்கை தோலினை உரித்த பின் நன்றாக மசித்து அதில் மிளகாய், தனியா, மஞ்சள், கரம் மசாலா பொடிகளையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். 3.பிசைந்து வைத்த கோதுமை மாவினையும் சப்பாத்திக்கு செய்வது போல பூரி அளவில் இடவும். 4.பிறகு அதன் மேல் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து அதனை சப்பாத்தி மாவினால் மூடவும். 5.பின்னர் அந்த மூடிய உருண்டையை சப்பாத்திக்கல்லில் வைத்து தேய்க்கவும். 6.கடைசியாக பரோட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு வேக வைக்கவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|