தேவையான பொருட்கள் :
ரவை- 2 கப்
வெங்காயம்- 1
தக்காளி-1
பச்சைமிளகாய்-2
இஞ்சிபூண்டு விழுது-அரை டேபிள் ஸ்பூன்
கேரட்,பீன்ஸ் தலா -அரை கப்
பச்சைப்பட்டாணி -கால் கப்
பூண்டு- ஆறு பற்கள்
கொத்தமல்லி- சிறிது
எண்ணெய்- கால் கப்
உப்பு- தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி- அரை டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
கடுகு- அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
சோம்பு- அரை டேபிள் ஸ்பூன்
பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை- 2
காய்ந்தமிளகாய்-இரண்டு
செய்முறை :
1.வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கேரட்,பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
2.ரவையை இலேசாக வறுத்து ஒரு தட்டில் கொட்டவும்.
3.கடாயில் எண்ணெயை காயவைத்து பட்டை ,கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு வறுத்து வெங்காயத்தைப்போட்டு வதக்கவும்.
4.பின்பு அதில் இஞ்சிபூண்டு விழுது,பச்சைமிளகாய் நறுக்கிய பூண்டு மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கவும்.
5.அதன் பிறகு தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
6.பின்பு மஞ்சத்தூள் உப்புத்தூளைப் போட்டு கலந்து ஐந்து கப் நீரை ஊற்றி கொதிக்க விடவும்.
7.அதன் பின்பு ரவையைப் போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.
8.ரவை நன்கு வெந்ததும் கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.இப்பொழுது சுவையான ரவா கிச்சடி தயார்.
|