|
||||||||
புளி அவல் உப்புமா |
||||||||
தேவையானவை : கொட்டி அவல் -1/2 கிலோ, புளி- சிறிதளவு, பச்சை மிளகாய்- 4 இஞ்சி -சிறிது, நிலக்கடலை- 50கிராம். முந்திரி- 4 எண்ணெய்-சிறிது, கடுகு-சிறிது, பெருங்காயத்தூள்-சிறிது தேங்காய் துருவல்-நாலு ஸ்பூன். செய்முறை : 1.முதலில் புளியை கொதிக்கும் தண்ணிரில் விட்டு ஊறவைத்து கரைசலில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு கொதிக்க விடவும். 2.அவலை ஒரு மிக்ஸியில் போட்டு இரண்டாக உடைக்கவேண்டும். 3.ஒரு பாத்திரத்தில் இந்த உடைத்த அவலில் சூடான புளித்தண்ணிரை கொஞ்சமாக விட்டு கிளறி ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.. 4.பிறகு நிலக்கடலையையும், முந்திரியையும் மிக்ஸில் பொடித்துக் கொள்ளவும்,இஞ்சியை மிக சிறிய துண்டுகளாக நறுக்கவும். 5.ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அதில் கடலைப் பருப்பு ஒரு ஸ்பூன், நிலக்கடலை, முந்திரி, பச்சை மிளகாய் கருவேப்பிலை,இஞ்சி போட்டுப் பின் உறிய அவலையும் போட்டு கலக்கவும். 6.கடைசியாக தேங்காய் துருவலை போட்டு கிளறவும்.புளி அவல் ரெடீ. |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|