தேவையானவை :
பச்சரிசி- இரண்டு கப் பயத்தம் பருப்பு- அரை கப் மிளகு- இரண்டு டேபிள் ஸ்பூன் சீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி- சிறிது (பொடியாக நறுக்கியது) பச்சைமிளகாய்- ஒன்று முந்திரி பருப்பு- ஒரு கையளவு கறிவேப்பிலை- 1 உப்பு- இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்(அ) நெய் - அரை கப்
செய்முறை :
1.பருப்பை பச்சை வாசனை போக வறுக்கவும்.பின்னர் அரிசியை கழுவி எடுத்துக்கொள்ளவும்.
2.அரிசி ,பருப்பு இரண்டையும் சேர்த்து கொக்கரில் போட்டு ,ஒரு கப்புக்கு இரண்டரை கப்பு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.அதனுடன் உப்பையும் சேர்க்கவும்.
3.நன்றாக வெந்தவுடன் அதனுடன் கடாயில் நெய்யில் சிறிது ஊற்றி அதில் மிளகு சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய்,கறிவேப்பிலை மற்றும் உடைத்த முந்திரிப் பருப்பு ஆகியவற்றைப் போட்டு வறுத்து பொங்கலின் மீது கொட்டவும்.
4.பின்பு மீதமுள்ள நெய்யை மேலாக ஊற்றி சாம்பார் மற்றும் மெது வடையுடன் சூடாக பரிமாறவும்.
|